தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே ஐஸ் வியாபாரி கொலை!

ராணிப்பேட்டை அருகே ஐஸ் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளேரி பகுதியில் அரசு டாஸ்மாக் கடையின் அருகே ஐஸ் வியாபாரியான நாராயணமூர்த்தி(42) என்பவர் கத்தியால் குத்தி்க் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து மர்மநபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல் துறையினர் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், முன்விரோதம் காரணமாக ஐஸ் வியாபாரி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஜவுளி நிறுவனங்களுக்கு 20% மானியம்! - முதல்வர் அறிவிப்பு

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

SCROLL FOR NEXT