தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே ஐஸ் வியாபாரி கொலை!

ராணிப்பேட்டை அருகே ஐஸ் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளேரி பகுதியில் அரசு டாஸ்மாக் கடையின் அருகே ஐஸ் வியாபாரியான நாராயணமூர்த்தி(42) என்பவர் கத்தியால் குத்தி்க் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து மர்மநபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல் துறையினர் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், முன்விரோதம் காரணமாக ஐஸ் வியாபாரி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்த சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் கைது

போலி மருத்துவா் கைது

தருமபுரி புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

தகராறை விலக்கச் சென்ற தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT