சூலூர் அருகே கோர விபத்து 
தமிழ்நாடு

சூலூர் அருகே கோர விபத்து: பள்ளி ஆசிரியர் பலி!

கண்டெய்னர் லாரி மோதியதில் ஆசிரியர் உயிரிழப்பு பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

சூலூர் செல்லப்ப பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த விவேகானந்தர் (வயது 56) என்பவர் பட்டணம் புதூர் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆசிரியர் விவேகானந்தர், பள்ளிப் பணிகளை முடித்துக்கொண்டு தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பட்டணம் புதூர் பகுதியில் கண்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில், லாரியின் பின்பக்க டயரில் அடிபட்டு, அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் விவேகானந்தரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vivekanandhar (56), who was working as a teacher at the Sulur Chellappapalayam Government School, died on the spot in a horrific accident near Pattanam Puthur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேயிலைத் தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்! மக்கள் அச்சம்!

ராகுல் தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தை புறக்கணித்த சசி தரூர்! முதல்முறை அல்ல; 3 வது முறை!

விக்ரம் பிரபுவின் சிறை டிரைலர்!

யு-19 ஆசிய கோப்பை: இந்தியா 433 ரன்கள் குவிப்பு!

ஓடிடியில் வெளியானது தீயவர் குலை நடுங்க!

SCROLL FOR NEXT