முகப்பு
தமிழ்நாடு

கடலூர் ரயில் விபத்து: பலியான மாணவர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

கடலூர் ரயில் விபத்தில், பலியான பள்ளி மாணவர்களின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை, 2025 at 7:46 AM
கடலூர் சம்பவம்
பகிர்:

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில், தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று பேர் பலியாகினர். பலியான மாணவர்களில் 2 பேரின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, ரயில்வே கேட் பகுதியில், பள்ளி வேன் மீது விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் மோதிய விபத்தில், திராவிடமணி என்பவரின் மகள் சாருமதி (16), விஜயசந்திரகுமார் என்பவரின் மகன் விமலேஷ் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இவர்களது உடல்கள் உடல்கூறாய்வுக்குப் பிறகு அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வேனில் இருந்த ஓட்டுநர் சங்கர் (47) மற்றும் மூன்று மாணவர்கள் காயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த திராவிடமணியின் மகன் செழியன் (15) சிகிச்சைப் பலனின்றி பலியானதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் பலியான சாருமதியும், மருத்துவமனையில் பலியான செழியனும் அக்கா, தம்பி என்று தெரிய வந்துள்ளது.

summary

Three people were killed when a train hit a private school van in the Chemmanguppam Railway Gate area of ​​Cuddalore district. The bodies of two of the deceased students were handed over to their families.

முழு கட்டுரையைப் படிக்க →