முகப்பு
தமிழ்நாடு

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

அன்புமணியுடன் சந்திப்பு குறித்து ராமதாஸ் கருத்து....

Updated On : 1 ஜூன், 2025 at 7:39 AM
ராமதாஸ், அன்புமணி
பகிர்:

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் மகளிர் பெருவிழா ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். நடப்பாண்டில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

அன்புமணியை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”உலகில் அதிசயம் எப்போது வேண்டுமானாலும் நிகழும். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை, எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு, சுதந்திரமாக செயல்படுவது அவரவர் உரிமை. கட்சியில் ஒருவர் போனால், இன்னொருவர் வருவார்” என்றார்

மேலும் அவர் கூறுகையில், ”அன்புமணி விவகாரம் தொடர்பாக பாமக சட்டவிதிகளை ஆராய்ந்து நாளை(ஜூன் 2) பதில் அளிக்கிறேன்.

என்னை பின்பிலத்தில் இருந்து யாரும் இயக்கவில்லை. கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை 46 ஆண்டுகளாக பயணித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

முழு கட்டுரையைப் படிக்க →