விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் மீட்பு
திருப்புவனமத்தில் விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனமத்தில் விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு பசுவின் மீது வாகனம் மோதியதில் பசு சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு அந்த பசுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் மற்றும் சிமெண்ட் பைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், திறந்தவெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும்போது பசுக்கள் பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், அது அவற்றின் வயிற்றில் சேரும்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. கால்நடைகள் தங்குமிடங்களில் அடைத்து வைக்கப்பட வேண்டும். திறந்தவெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அவை உட்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றை சுதந்திரமாக சுற்றித் திரிய அனுமதிக்கக்கூடாது என்றார்.
ராஜஸ்தான்: மின்மாற்றி மீது வீசப்பட்ட தெரு நாய்
Nearly 10 kg of plastic was recovered from a cow that died after being hit by a speeding vehicle near here, officials said on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.