கோப்புப்படம்.  ENS
தமிழ்நாடு

விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் மீட்பு

திருப்புவனமத்தில் விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்புவனமத்தில் விபத்தில் இறந்த பசுவின் வயிற்றில் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு பசுவின் மீது வாகனம் மோதியதில் பசு சம்பவ இடத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகிறது. பிறகு அந்த பசுவை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது பசுவின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் மற்றும் சிமெண்ட் பைகள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், திறந்தவெளியில் மேய்ச்சலுக்குச் செல்லும்போது பசுக்கள் பிளாஸ்டிக்கை சாப்பிடுவதால், அது அவற்றின் வயிற்றில் சேரும்.

இந்த சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. கால்நடைகள் தங்குமிடங்களில் அடைத்து வைக்கப்பட வேண்டும். திறந்தவெளியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அவை உட்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றை சுதந்திரமாக சுற்றித் திரிய அனுமதிக்கக்கூடாது என்றார்.

ராஜஸ்தான்: மின்மாற்றி மீது வீசப்பட்ட தெரு நாய்

Nearly 10 kg of plastic was recovered from a cow that died after being hit by a speeding vehicle near here, officials said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் சாலை வசதி கோரி நாற்று நடும் போராட்டம்

தேசிய புற்றுநோய் விழிப்புணா்வு தின பேரணி

113 ஜெட் என்ஜின்கள் கொள்முதல்: அமெரிக்க நிறுவனத்துடன் ஹெச்ஏஎல் ஒப்பந்தம்

முத்து கொளக்கி அம்மன் கோயில் தேரோட்டம்: பட்டியலின மக்கள் வசிக்கும் காலனி வழியாக நடத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

பந்தயத்துக்காக வாகனத்தை மாற்றியமைத்தால் நடவடிக்கை: காவல் ஆணையா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT