கருர் கூட்ட நெரிசல் 
தமிழ்நாடு

தவெக கூட்ட நெரிசல் வழக்கு: ஆவணங்கள் திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம்!

தவெக வழக்கு தொடர்பான ஆவணங்கள் திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம் பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆவணங்கள் ஒப்படைப்பு வழக்கானது கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்த நிலையில். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் வழக்கை விசாரித்து வந்த எஸ்ஐடி தரப்பு சார்பில் கரூர் ஜூடீசியல் மாஜேஸ்திரேட் நீதிமன்றம் 1-ல் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் திருச்சி நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இனி இந்த வழக்கில் ஆவணங்கள் தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றம் மூலமாகவே நடைபெறும் என சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The case of handing over documents related to the Karur Thaveka stampede incident has been transferred from the Karur court to the Trichy court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

57/0-இல் தொடங்கி 159/10: தென்னாப்பிரிக்காவின் அதிரடி தொடக்கமும் வீழ்ச்சியும்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சு பயிற்சியாளராக டிம் சௌதி நியமனம்!

படப்பிடிப்பில்... மிருணாள் தாக்குர்!

கொஞ்சம் கறுப்பு உடை, நிறைய இலக்கு... கிரிஸ்டல் டிசௌசா!

புதிய பாதைகள், புதிய பயணங்கள்... நிகிதா சர்மா!

SCROLL FOR NEXT