கரூர் கூட்ட நெரிசல்! இடையூறு விளைவிக்கவே காலியான ஆம்புலன்ஸ்கள் வந்தன: நிர்மல்குமார்
கரூரில் வேண்டுமென்றே காலியான ஆம்புலன்ஸ்கள் மூலம் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக தவெக நிர்வாகி நிர்மல்குமார் குற்றச்சாட்டு
கரூரில் வேண்டுமென்றே காலியான ஆம்புலன்ஸ்கள் மூலம் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக தவெக நிர்வாகி நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுடன் தவெக வேட்பாளர் நிர்மல்குமார் பேசுகையில், கரூரில் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் இருந்த சாலையைக் கடக்க வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஆகும். 3 கி.மீ. சாலையாக இருந்தாலும், தவெக கூட்டத்தால், சாலையைக் கடக்க 2 மணிநேரம் ஆகும். ஆனால், அதே பாதையில் சுற்றிச் சென்றால், 10 நிமிடங்களில் சென்று விடலாம்.
ஆனால், அதையும் மீறி, மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறி, பல காலியான அவசர ஊர்திகள் கூட்டத்தினுள்ளே அனுப்பப்பட்டன. இவ்வாறு இடையூறு செய்வதற்காகவே ஒருசில செயல்பாடுகள் இருப்பதால்தான், சந்தேகத்தின்பேரில் கூறினோம். ஏனெனில், திமுக என்னென்ன செய்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
Advertisement
Advertisement
ஒரு கூட்டம் நடக்கும்போது, கூட்டத்தினுள் 10 அவசர ஊர்திகளை விடுவது, 10 ஊர்திகளும் காலியாகவும், அவற்றின் ஓட்டுநர்களும் முழு போதையில் வருகின்றனர்.
இவ்வாறு போதையில் வந்த அவசர ஊர்தி ஓட்டுநர்களைப் பிடித்த தவெக நிர்வாகிகள், காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆனால், அவர்களைக் காவல்துறை காப்பாற்றி அனுப்பி விட்டது.
இவ்வாறு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களைத்தான் நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். தவிர, பொதுமக்களின் பயன்பாட்டில் இருப்பவற்றைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை என்று தெரிவித்தார்.
Karur Stampede! Empty Ambulances Arrived Solely to Cause Disruption: Nirmalkumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.