முகப்பு
தமிழ்நாடு

எஸ்ஐஆர்-க்கு எதிராக தவெக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து தவெக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

Updated On : 15 நவம்பர், 2025 at 2:22 PM
பகிர்:

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், கட்சிப் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ``வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கும் என்று தமிழகத்தில் இருந்து முதன்முறையாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது, தமிழக வெற்றிக் கழகம்தான்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.

தமிழக மக்களின் வாக்குரிமையைக் கேள்விக்குறியாக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மற்றும் அது சார்ந்த குளறுபடிகளுக்கு எதிராக, ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) காலை 11 மணி முதல், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் கழகத் தோழர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வாக்குரிமை இல்லாத நிலை வரலாம்! - எஸ்ஐஆர் பற்றி விஜய் வெளியிட்ட விடியோ!

summary

TVK protests against Special Intensive Revision

முழு கட்டுரையைப் படிக்க →