கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், கேப்டன் மறைந்து விட்டார், கட்சி மறைந்து விட்டது என்று கூறியவர்களெல்லாம் தற்போது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள்.
2026 இல் தேமுதிக மிகப்பெரிய வெற்றியைப் பெறும். எஸ்ஐஆர் என்றால் என்ன என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இதுவரை தமிழக அரசியலில் நாம் பார்க்காத தேர்தலாக அமையும். ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் தேமுதிக சார்பில் மக்கள் உரிமை மாநாடு 2.o நடைபெறும். அதில் கூட்டணி குறித்து தெளிவான முடிவை அறிவிப்போம். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.
Advertisement
Advertisement
தில்லி உயிரியல் பூங்காவிற்கு மீண்டும் திரும்பிய நரிகள்!
மேலும் கோவை, மதுரைக்கு இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் ஆளும் கட்சியினர் நிறைவேற்ற வேண்டும். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தேமுதிக வகிக்கும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணி அமைச்சரவை அமையும். கூட்டணி அமைச்சரவை என்பது தமிழ்நாட்டில் இதுவரை பார்த்ததில்லை. ஆனால் வட நாடுகளில் உள்ளது. இது தற்பொழுது தமிழகத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார்.
DMDK General Secretary Premalatha Vijayakanth has said that the Coimbatore-Madurai Metro Rail project should be reconsidered.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.