மேட்டூர் அணை 
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(அக். 12 )உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் ஆணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணைகளில் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணையில் உபரி நீர் வரத்து காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று(அக். 11) காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 29,540 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர், இன்று(அக். 12) காலை விநாடிக்கு 59,123 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாள்களாக நீர் வரத்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் காலை 111.48 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115.18 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாள்களில் அணையின் நீர்மட்டம் 3.70 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 85.99 டிஎம்சியாக உள்ளது.

The water level of Mettur Dam has risen today (Oct. 12).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

“சிம்ம ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ரூ. 4 லட்சத்துக்காக அண்ணன் கொலை! கணவருடன் தங்கை செய்த சதி!

ரீவைண்ட்... அருண் விஜய்!

SCROLL FOR NEXT