பாதிக்கப்பட்ட மீனவர்கள்  DNS
தமிழ்நாடு

நாகை மீனவர்கள் 19 பேர் மீது தாக்குதல்!

தமிழக மீவர்கள் 19 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியிலிருந்து 5 படகுகளில் கடலுக்குள் சென்ற 19 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர்கள், தாக்குதல் நடத்தி உடமைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்த கங்கைநாதன் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடி இழைப் படகில் மூன்று மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றனர். அன்று இரவு கோடியக்கரைக்கு அப்பால் கடலில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இலங்கைப் படகு ஒன்றில் வந்த மூவர் மீனவர்களின் படகில் ஏறி, கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி மீனவர்களின் உடமைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

இதேபோல, புஷ்பவனத்தில் இருந்து மேலும் நான்கு படங்களில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி செல்லிடப்பேசி உள்ளிட்ட உடமைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

ஐந்து படகுகளில் சென்று பாதிப்படைந்த 19 மீனவர்களும் திங்கள்கிழமை கரைக்குத் திரும்பிய நிலையில் காவல் துறையினர் விசாரித்து வருகிறனர்.

இதையும் படிக்க | கரூர் பலி: இலவச சட்ட உதவி மையத்தை அணுகிய பாதிக்கப்பட்டவர்கள்!

Sri Lankan pirates attack 19 Nagai fishermen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த ரூ. 2 லட்சம்! பழைய ரூ. 2,000 தாள்கள்!

தீபாவளியையொட்டி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை!

இந்தியா - பாக். உறவை இணைப்போம்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப்!

டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த மார்க்ரம்!

கரூர் கூட்ட நெரிசல் பலி!: CBI விசாரணைக்கு உத்தரவு | செய்திகள்: சில வரிகளில் | 13.10.25

SCROLL FOR NEXT