23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 128 வங்கதேசத்தினர் ஒப்படைப்பு!
23 இந்திய மீனவர்களை வங்கதேச அரசு விடுவித்துள்ளது குறித்து...
23 இந்திய மீனவர்களை வங்கதேச அரசு விடுதலை செய்துள்ள நிலையில், 128 வங்கதேச மீனவர்களை இந்திய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் கடந்து வங்கதேச கடல்பகுதியில் மீன்பிடிக்க முயன்ற 23 இந்திய மீனவர்கள் வங்கதேச அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சகம், கடலோரக் காவல் படையினர் மற்றும் வங்கதேச அரசின் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இருநாடுகளும் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வதற்கு ஒப்புக்கொண்டன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 23 இந்திய மீனவர்களை இன்று (ஜன. 29) விடுதலை செய்த வங்கதேச அரசு, சிறைப்பிடித்த 2 மீனவப் படகுகளையும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், இந்தியக் கடல்பகுதியில் மீன்பிடித்த 128 வங்கதேச மீனவர்கள் மற்றும் அவர்களுடன் சிறைப்பிடிக்கப்பட்ட 5 மீனவப் படகுகளையும் இந்திய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
இந்தக் கைதிகள் பரிமாற்றம், வங்கக் கடலில் சர்வதேச எல்லைக் கோட்டின் அருகில் இன்று காலை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
While the Bangladesh government has released 23 Indian fishermen, Indian authorities have handed over 128 Bangladeshi fishermen.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.