அக். 20 தீபாவளியன்று ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கம்!
தீபாவளியன்று சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம் பற்றி...
தீபாவளி பண்டிகையையொட்டி அக். 20 ஆம் தேதி(திங்கள்) ஞாயிறு அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வருகிற அக். 20 ஆம் தேதி திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரயில்கள் அக். 20 தீபாவளியன்று ஞாயிறு அட்டவணையில் இயங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
summary