முகப்பு
தமிழ்நாடு

சீமான் மீது வழக்குப்பதிவு

நீதிமன்ற உத்தரவின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On : 19 அக்டோபர், 2025 at 11:00 AM
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
பகிர்:

நீதிமன்ற உத்தரவின் பேரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்குரைஞர் அலெக்ஸாண்டர் சார்லஸ் தொடர்ந்த வழக்கில் வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியொன்றில், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்குரைஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

அந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் புகார் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அலெக்சாண்டர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரரின் புகார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Chennai Thirumangalam police have registered a case against Seeman on a court order.

முழு கட்டுரையைப் படிக்க →