முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 22) விடுமுறை.

Updated On : 21 அக்டோபர் 2025, 9:15 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தொடர் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று முழுவதுமே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதியில் வலுவடைந்து காணப்படுகிறது.

Advertisement

இதனால், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 22) விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று, கடலூரிலும் நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பருவமழை: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

summary

School college leave due to heavy rain

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.