தருமபுரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தாலும், மழைக்கு வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தருமபுரியில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் நாளை (அக். 23) விடுமுறை அறிவித்து ஆட்சியர் சதீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிக்க | ஆம்பூரில் விடிய விடிய கனமழை: நிரம்பி வழியும் தடுப்பணை!