ரெளடி டைம்! என்ன சொல்கிறார் உதயநிதி!
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் பதிவு பற்றி...
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அவரின் வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
’ரெளடி டைம்’ எனக் குறிப்பிட்டு, நாயைப் பார்த்து சிரிப்பதைப் போன்ற புகைப்படத்தை இன்று (செப். 13) காலை எக்ஸ் தளத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தற்போது உதயநிதி ஸ்டாலினின் பதிவு வைரலாகி வரும் நிலையில், சுமார் 6 மணிநேரத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், தெரு நாய் விவகாரம், விஜய்யின் பிரசாரம் ஆகியவற்றை தொடர்புபடுத்தி, அவரது பதிவுக்கு நூற்றுக்கணக்கானோர் காமெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாகவே, இதே நாயுடன் இருக்கும் புகைப்படங்களை ரெளடி எனக் குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய், தனது முதல் பிரசாரப் பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குவதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin shared a photo of himself with his pet dog on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.