கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம்!
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம்
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், தவெக தலைவர் விஜய் ரூ.20 லட்சமும் அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கரூர் பலி: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?
summary