தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த சிலம்பரசன், சென்னை சட்டம் - ஒழுங்கு துணை ஐ.ஜி. மற்றும் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல திருநெல்வேலி மேற்கு, காவல் துணை ஆணையராக இருந்த மதன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட தலைமையக காவல் துணை ஆணையராக இருந்த விஜயகுமார், திருநெல்வேலி மேற்கு - துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி காவல் ஆணையர், அந்த மாவட்ட தலைமையக காவல் துணை ஆணையர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.