முகப்பு
தமிழ்நாடு

கோடியக்கரையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

கோடியக்கரையில் கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

Updated On : 9 ஜனவரி, 2026 at 8:20 AM
மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் கோடியக்கரை மீன்பிடி துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று(ஜன. 9) வழக்கத்தைவிட வேகமான தரைக்காற்று வீசிவரும் நிலையில், கோடியக்கரை கடல் பரப்பு சீற்றமாக காணப்படுவதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

சீற்றமாகக் காணப்படும் கோடியக்கரை கடல்.

இதன் காரணமாக, தமிழக கடலோரம் மற்றும் காவிரி படுகை பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை லேசான மழை பெய்த நிலையில், தற்போது, வழக்கத்தைவிட சற்று வேகமான தரைக்காற்று வீசிவருகிறது.

கோடியக்கரை பகுதி கடல் பரப்பு சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

summary

Due to rough seas in Kodiyakarai, fishermen did not go out to sea.

முழு கட்டுரையைப் படிக்க →