முகப்பு
தமிழ்நாடு

குடியரசு நாள்: புதுக்கோட்டையில் ஆட்சியர் அருணா கொடியேற்றினார்!

புதுக்கோட்டையில் கொடியேற்றிய ஆட்சியர் மு. அருணா.

Updated On : 26 ஜனவரி, 2026 at 5:31 AM
புதுக்கோட்டையில் கொடியேற்றிய ஆட்சியர் அருணா.
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படைத் திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாவட்ட ஆட்சியர் மு. அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ. 32.11 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 391 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை

விழாவில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் 852 பேர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் தி்ட்ட இயக்குநர் பா. ஜெயசுதா, மாநகராட்சி ஆணையர் த, நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டல அலுவலகத்தில், மண்டலப் பொதுமேலாளர் க. முகமது நாசர் கொடியேற்றி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் கொடியேற்றி வைத்தார்.

summary

At the Republic Day celebrations held on Monday at the Armed Forces parade ground on behalf of the Pudukkottai district administration, District Collector M. Aruna hoisted the national flag and accepted the parade salute from the police personnel.

முழு கட்டுரையைப் படிக்க →