முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ்ஸின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம்! சேலத்தில் நிறைவு செய்கிறார்!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் பற்றி...

Updated On : 28 மார்ச், 2026 at 7:51 AM
மயிலாப்பூர் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி... - ADMK
பகிர்:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மயிலாப்பூரில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டு பின்னர் பிரசாரத்தைத் தொடங்கிய அவர், ஏப்ரல் 1 ஆம் தேதி புதுக்கோட்டையில் முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

மயிலாப்பூர், ஆலந்தூர், தாம்பரம் பகுதிகளைத் தொடர்ந்து இன்று(மார்ச் 28) சென்னை ஆர்.கே. நகர், திருவொற்றியூர் பகுதிகளில் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார்.

இதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏப். 2 ஆம் தேதி மாலை தருமபுரி, கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், தொடர்ந்து ஏப். 19 வரை பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்கிறார்.

ஏப். 8, 9 தேதிகளில் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

ஏப். 19 சேலத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் கடைசியாக பிரசாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

summary

AIADMK General Secretary Edappadi Palaniswami 2nd phase election campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.