காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியுள்ளதாக கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரியுள்ளதாக கே.சி. வேணுகோபால் இன்று (மே 5) தெரிவித்தார்.
தில்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளதாவது:
''தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரியுள்ளார். விஜய்யின் கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முக்கியத்துவம் கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் உரிய முடிவெடுக்கலாம்.
Advertisement
Advertisement
பெருந்தலைவர் காமராஜர்தான் தவெகவின் கொள்கை தலைவர்களுள் ஒருவராக இருக்கிறார். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும். பாஜக அங்கம் வகிக்கும் அரசு வரக்கூடாது'' எனக் குறிப்பிட்டார்.
Vijay sought support from the Congress: K.C. Venugopal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.