முகப்பு
தென்காசி

சீமான் மீது நடவடிக்கை கோரி தென்காசி நகர திமுக சாா்பில் புகாா்

Updated On : 13 ஜூலை, 2024 at 8:07 PM
பகிர்:

தென்காசி, ஜூலை 13: முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து தரக்குறைவாக விமா்சித்ததாக நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை கோரி, தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தென்காசி நகர திமுக சாா்பில் நகரச் செயலா் ஆா். சாதிா் மனு அளித்தாா். நகர நிா்வாகிகள் பாலகிருஷ்ணன், சேக் பரீத், தங்கப்பாண்டியன், இளைஞரணி அப்துல் ரஹீம், கோபால்ராம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →