வணிகம்

ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜனவரி 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

DIN

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜனவரி 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கிவரும் டாடா மோட்டார்ஸ் தனது வணிக வாகனங்களின் விலையை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புச் செலவு அதிகரிப்பை ஈடுகட்டுவதற்காக விலை உயர்த்துவதாக கூறியுள்ளது. 

இந்த விலையுயர்வு தங்கள் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் முழுமைக்கும் பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, ஹோண்டா மற்றும் ஆடி போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஜனவரியில் வாகன விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்றுமாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்!

விஜய்யின் நாளைய புதுச்சேரி பயணம் ரத்து!

ஆலங்குளம் அருகே தலைமைக் காவலரை கொல்ல முயற்சி: 5-க்கும் மேற்பட்டோருக்கு வலை

ஒரே நாடு, ஒரே தேர்தல்: இந்திய வளர்ச்சியின் திருப்புமுனை! ராம்நாத் கோவிந்த்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

SCROLL FOR NEXT