கடுமையான பயிற்சியில் மகளிர் கிரிக்கெட் அணி!
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், ஹர்மன் பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றுப்போனது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், ஹர்மன் பிரீத் கவுர் தலைமையில் களமிறங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றுப்போனது. அன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த மகளிர் கிரிக்கெட் போட்டியை காண வந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 86,174 பேர். இதுவரை அங்கு நடந்த போட்டிகளில் அதிகம்பேர் வந்திருந்தது இதுதான் முதல் முறை யாம். இருந்தாலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், இறுதிசுற்று வரை முன்னேறியதற்கான பாராட்டை பெற்றனர்.
அடுத்து 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்ள மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, ஹர்மன் பிரீதி கவுர், ஸ்மிரிதி மந்தனா என பிரபலங்கள் அடங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இப்போது முதலே கடுமையான பயிற்சியில் முழுமையாக இறங்கியுள்ளது.