மகளிர்மணி

பிரிஞ்சி இலையின் மகத்துவம்

தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் பயன்படுத்தப்படுகிறது.  இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியன இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கவிதா சரவணன்

தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும், அழகுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து ஆகியன இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.

செரிமானத்தைச் சீராக்கி, செரிமான பிரச்னை வராமல் தடுக்கும். அதிலும், பிரிஞ்சி இலையை டீயில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மலச்சிக்கல், குடலியக்கப் பிரச்னைகள் குணமாகும்.

டைப் 2 நீரிழிவுக்கு நல்லது. ரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரித்து இதயத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்து வருவது நல்லது.

தொடர்ந்து பிரிஞ்சி இலையை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவதும் நிற்கும்.  இலையை நீரில் நன்கு வேக வைத்து,  ஆறியதும் தலையைக் கழுவினால் முடி உதிர்வது நிற்கும்.

இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதை சருமத்தில் எரிச்சல் உள்ளவர்கள் கழுவினால் எரிச்சல் போகும். 

இலையில் உள்ள ஆண்டி பாக்டீரியாக்கள் கிருமி தாக்கத்தில் இருந்தும் காக்கும். பிரியாணி இலையை கொதிக்க வைத்த நீருடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, தலையில் தேய்த்து வந்தால் பிரச்னை தீரும்.

சிறுநீரகப் பிரச்னைகள், சிறுநீரகக் கற்களைப் போக்க பிரிஞ்சி இலை பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு இலையை நீரில்போட்டு காய்ச்சி அதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT