மகளிர்மணி

கற்றாழை பருப்புப் பாயாசம்

முதலில் கற்றாழையைத் தோல் சீவி நன்றாக அலசி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாம், முந்திரியை நெய்யில் வறுக்கவும். பின்னர், பாசிப்பருப்பை ஒரு வெறும் வாணலியில் போட்டு வறுத்து

ஏ.எஸ்.கோவிந்தராஜன்


தேவையான பொருள்கள் :

பாசிப்பருப்பு  1 கிண்ணம்
துருவிய வெல்லம்  2 கிண்ணம்
காய்ச்சிய பால்  2 கிண்ணம்
கற்றாழை  2 (தோல் சீவி நறுக்கியது)
முந்திரி  10
பாதாம்  10
ஏலக்காய்ப் பொடி  2 சிட்டிகை
நெய்  3 தேக்கரண்டி

செய்முறை : 

முதலில் கற்றாழையைத் தோல் சீவி நன்றாக அலசி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதாம், முந்திரியை நெய்யில் வறுக்கவும். பின்னர்,  பாசிப்பருப்பை ஒரு வெறும் வாணலியில் போட்டு வறுத்து, பின் குக்கரில் குழைய வேகவைத்து மசித்துக்கொள்ளவும். அதனுடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பிறகு அதனுடன் துருவிய வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரைந்ததும் கற்றாழையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும்.  பின்னர்,  பாதாம், ஏலக்காய்ப் பொடி, முந்திரி சேர்த்து இறக்கினால், சுவையான கற்றாழை பருப்புப் பாயாசம் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

ஜிஎஸ்டி சீர்திருத்த நம்பிக்கையில் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

பாபா - கூலி! இதை கவனித்தீர்களா?

கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT