முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மலைமேல் இருக்கும் இனிய தேனைத் தட்டிவிட்டு ஆண் குரங்கு நக்கி மகிழும், அத்தகு மலையைச் சேர்ந்தவனே! தெருவில் செல்லும் பசு ஒருவரை முட்டிவிட்டால் பதிலுக்கு அவர் பசுவை முட்டுவதில்லை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:


ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?- தீ ம் தேன்
முசுக் குத்தி நக்கும் மலை நாட- தம்மைப்
பசுக் குத்தின், குத்துவார் இல் (பாடல்-268)


(தெ-ரை) மலைமேல் இருக்கும் இனிய தேனைத் தட்டிவிட்டு ஆண் குரங்கு நக்கி மகிழும், அத்தகு மலையைச் சேர்ந்தவனே! தெருவில் செல்லும் பசு ஒருவரை முட்டிவிட்டால் பதிலுக்கு அவர் பசுவை முட்டுவதில்லை. அதுபோல, அறிவற்ற சிறியோர் பரப்பும் பொய்யுரைக்குக் கற்றறிந்த சான்றோர் மனம் வருந்திச் சினம் கொண்டு பேசுவரோ? பேசார்.

முழு கட்டுரையைப் படிக்க →