பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
புன்னை மரங்கள் பரந்து செழித்து இருக்கும் கடற்பரப்பை உடையவனே! செழித்து வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின்கீழ் இன்னொரு மரத்தை வளர்த்தல் இயலாது; கூடாது.
மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப? புன்னைப்
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!
மரத்தின் கீழ் ஆகா, மரம். (பாடல்: 311)
புன்னை மரங்கள் பரந்து செழித்து இருக்கும் கடற்பரப்பை உடையவனே! செழித்து வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின்கீழ் இன்னொரு மரத்தை வளர்த்தல் இயலாது; கூடாது. அதுபோலவே, அரசனின் ஆணை செல்லும் இடங்களில் அந்த ஆணைக்கு மாறாக மற்றவர் எவ்வாறு ஆணை செலுத்த முடியும்? செலுத்தார். செலுத்தக் கூடாது என்பது கருத்து.