முகப்பு
உலகம்

ஆஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்திய வம்சாவழி டிரைவர்!

ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி  வந்த இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:49 AM
பகிர்:

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி  வந்த இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்மீத் அலிஷேர் என்பவர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பஞ்சாபி இனத்தை சேர்ந்தவராவார்.  இவர் நேற்று தனது பணியில் இருந்த போது, பேருந்திலிருந்து பயணி ஒருவரால் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டார். இந்த கொடூர சம்பவம் பேருந்து பயணிகள் அனைவரின் கண் முன்னால் நடைபெற்றது என்பது அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. .

இந்த கொடூர சம்பவத்தை செய்த 48 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கொலைக்காண காரணம் என்ன என்பது தெரியவில்லை என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →