உலகம்

சட்டவிரோத குடியேற்றம்: அமெரிக்காவில் 90 மாணவர்கள் கைது! பெரும்பாலானோர் இந்தியர் எனத் தகவல்!

DIN

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அடையாளம் காண, அமைக்கப்பட்ட போலி பல்கலைக்கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள் 90 பேரை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்கவும், ஏற்கனவே சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றவும் அந்த நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்க அரசால் ஒரு போலி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்காணித்தது. அதன்படி, இந்தப் பல்கலைக்கழகத்தில்  பதிவு செய்த 161 மாணவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மேலும், 90 மாணவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இந்திய மாணவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இதுவரை 250 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 80% பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டதாகவும், எஞ்சிய மாணவர்கள் விரைவில் நாடு கடத்த அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பல்கலைக்கழகம் போலியானது என்று ஏற்கனவே மாணவர்களுக்குத் தெரியும் என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT