கராச்சியில் சிலிண்டர் வெடித்து சிறுவன் பலி, 6 பேர் காயம்
கராச்சியில் குடியிருப்பு கட்டடத்திடல் சிலிண்டர் வெடித்ததில் 10 வயது சிறுவன் மரணமடைந்தான்.
கராச்சியில் குடியிருப்பு கட்டடத்திடல் சிலிண்டர் வெடித்ததில் 10 வயது சிறுவன் மரணமடைந்தான்.
பாகிஸ்தானின் புது காரச்சியில் உள்ளது டுய சவுக். இங்குள்ள குடியிருப்பு கட்டடத்தில் இருந்து சிலிண்டர் இன்று திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 வயது சிறுவன் பலியானான். 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிலிண்டர் வெடித்ததில் குடியிருப்பு கட்டடத்தின் ஒருபகுதியும் சேதமடைந்தது. சிலிண்டரில் எரிவாயு கசிவை அறியாத வீட்டின் உரிமையாளர் சிகரெட்டைப் பற்றவைத்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.