முகப்பு
உலகம்

சீன அதிபரின் பாகிஸ்தான் பயணம் ஒத்தி வைப்பு

கரோனா தொற்றுப் பரவலால் செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் பாகிஸ்தான் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
சீன அதிபர் ஷி ஜின்பிங்
பகிர்:

கரோனா தொற்றுப் பரவலால் செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் பாகிஸ்தான் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் முக்கிய நட்பு நாடுகளாக பாகிஸ்தான் மற்றும் சீனா விளங்கி வருகிறது. பாகிஸ்தான் சீனா இடையே பொருளாதார நடவடிக்கைகளுக்காக பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டிற்கான சீனத் தூதர் யாவ் ஜிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் செல்லவிருந்த சீன அதிபரின் பயணம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் மறுதேதியை இருநாட்டு அதிகாரிகளும் ஆலோசித்து வருவதாகவும், பயண தேதி இறுதியான பின் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் சீன அதிபரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →