சீனாவில் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் பலியானர்கள்.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள மின் நிலையத்தில் நேற்று திடீரென் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 47 வாகனங்களில் விரைந்த 235 தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர்.
நீண்ட போராட்டத்துக்கு பிறகு அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 2 தீயணைப்பு வீரர்கள் பலியானார்கள். மேலும் ஒரு வீரர் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் மின் நிலைய பணியாளர் ஒருவரும் மாயமானார்.