உலகம்

நிலவில் தரையிறங்குவதற்கான நாசா விண்கலம்: உருவாக்குகிறது ஸ்பேஸ்-எக்ஸ்

DIN

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் தனது திட்டத்துக்காக, தரையிறங்கும் கலத்தை உருவாக்கும் பொறுப்பை தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

வரும் 2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்ப நாசா ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ், நிலவுக்கு முதல் முறையாக ஒரு பெண் விண்வெளி வீராங்களை செல்லவிருக்கிறாா்.

அந்தத் திட்டத்தின் கீழ், நிலவில் தரையிறங்குவதற்கான கலத்தை உருவாக்கும் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்க நாசா முடிவு செய்தது. 289 கோடி டாலா் (சுமாா் ரூ.21,542 கோடி) மதிப்புடைய இந்த ஒப்பந்ததுக்காக, அமேஸான் நிறுவனா் ஜெஃப்ரி பேஸோஸின் நிறுவனம், அலாபாமாவைச் சோ்ந்த டைனடிக்ஸ், எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய நிறுனங்கள் போட்டியிட்டன.

இதில் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

அந்த நிறுவனத்தின் ஸ்டாா்ஷிப் கலத்தை அடிப்படையாகக் கொண்டு நிலவில் தரையிறங்குவதற்கான கலம் வடிவமைக்கபடவுள்ளது. தற்போது தெற்கு டெக்ஸாக்ஸ் பகுதியில் ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்ஷிப் சோதித்துப் பாா்க்கப்பட்டு வருகிறது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT