முகப்பு
உலகம்

துருக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
துருக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு
பகிர்:

துருக்கி நாட்டின் கருங்கடல் பகுதியில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கியின் கருங்கடல் பகுதியில்  உள்ள மாகாணங்களான பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் கடந்த புதன்கிழமை கனமழை பெய்தது.

இந்த கனமழையால் வீடுகள், பாலங்கள் இடிந்து பலத்த சேதம் ஏற்பட்டது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில் இந்த திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. 

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்புத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை 1700க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மேலும் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →