கோப்புப்படம் 
உலகம்

தலிபான்களுக்கு எதிராக போராட்டம்..தேசிய கொடியுடன் தெருவில் களமறிங்கிய மக்கள்

தலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர்.

DIN

தலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றிய தலிபான்கள், ஆட்சி அமைப்பதில் மும்முரம் காட்டிவருகின்றனர். இதனிடையே, தலிபான்களை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

சுதந்திர தினமான நேற்று (வியாழக்கிழமை) தேசிய கொடி ஏந்தி மக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை வன்முறை கொண்டு தலிபான்கள் அடக்கிவருகின்றனர். 

கொடூரமான சட்டங்களால் ஆளப்பட்ட கடந்த கால ஆட்சியை போல் அல்லாமல் மிதமான போக்கு கடைபிடிக்கப்படும் என தலிபான்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இதற்கு நேர் மாறாக மாற்று கருத்து தெரிவிப்பவர்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திவருகின்றனர். 

இதனிடையே, காபூல் முழுவதும் தலிபான்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்ட பெண்கள் மற்றும் மனித உரிமைகள் தலிபான்கள் ஆட்சியில் மறுக்கப்படுமோ என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஷரியத் சட்டத்தின்படி, ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தப்படும் என தலிபான்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT