ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 
உலகம்

தலிபான்களுக்கு ஆதரவளிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை: ஜப்பான்

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை ஆதரவளிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பான் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

DIN

தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசை ஆதரவளிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பான் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு ஆட்சியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

தலிபான்களுக்கு சீனா ஆதரவளித்துள்ள நிலையில் மற்ற நாடுகள் ஆப்கன் நிலவரம் குறித்து கண்காணித்து வருகின்றன. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களை அங்கீகரிப்பது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் கட்சுனோபு கட்டோ தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசுகையில், நாட்டின் நலன் மற்றும் அமெரிக்கா உள்பட சம்மந்தப்பட்ட பிற நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஜப்பான் தேவையான முடிவை எடுக்கும் என்று கூறினார். 

மேலும், 'இப்போதைய நிலைமை நிச்சயமற்றது. அதனால் இப்போது அறிவிப்பு வெளியிடுவது சரியானதாக இருக்காது. நிலைமையை முழுவதும் கண்காணித்த பிறகு ஆலோசனைக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT