இலங்கையில் சக காவலர் சுட்டதில் 4 காவலர்கள் பலி 
உலகம்

இலங்கையில் சக காவலர் சுட்டதில் 4 காவலர்கள் பலி

இலங்கையின் திருக்கோவில் நகரப் பகுதியில், காவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 4 காவலர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

DIN


கொழும்பு: இலங்கையின் திருக்கோவில் நகரப் பகுதியில், காவலர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 4 காவலர்கள் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

திருக்கோவில் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காவலர் ஒருவர், காவல்நிலையத்தில் நின்றிருந்த காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.

கிறிஸ்துமஸ் ஈவ் நிகழ்ச்சியின் போது, வெள்ளிக்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்தில் நான்கு காவலர்கள் பலியாகினர் என்று மூத்த காவலர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிய காவலர்கள், அருகில் உள்ள மற்றொரு காவல்நிலையத்தில் துப்பாக்கியுடன் சரணடைந்தார். இதற்கான பின்னணி குறித்த விசாரிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT