உலகம்

ஆப்கானிஸ்தானுடனான எல்லையை மூடியது பாகிஸ்தான்

DIN

பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான் உடனான சாமன் எல்லைப் பகுதியை தற்காலிகமாக பாகிஸ்தான் மூடியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தானின் சாமன் எல்லைப் பகுதி வழியாக ஆப்கன் மக்கள் பாகிஸ்தான்இல் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கன் உடனான எல்லையை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் நாட்டின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித், “ஆப்கானிஸ்தானில் அமைதியும், ஸ்திரத் தன்மையும் நிலவ பாகிஸ்தான் விரும்புகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக ஆப்கன் உடனான சாமன் எல்லைப் பகுதி கம்பிவேலிகளால் மூடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக பல்வேறு குழப்பமான கருத்துகள் நிலவிவருவதை மறுத்த அவர் பாகிஸ்தானில் அமெரிக்கர்கள் யாரும் இல்லை என விளக்கமளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT