இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்த கனடா 
உலகம்

இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்த கனடா

டெல்டா வகை உருமாறிய கரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடையை செப்டம்பர் 26 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

டெல்டா வகை உருமாறிய கரோனா பரவல் காரணமாக இந்திய விமானங்களுக்கான தடையை செப்டம்பர் 26 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.

இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைக்கான தடையை கனடா செப். 21-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. இந்நிலையில் கனடாவில் இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், அதனை செப்டம்பர் 26 வரை நீட்டித்து கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும் பிற நாடுகளின் வழியாக கனடா வரும் இந்தியப் பயணிகள் கரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்டா வகை கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இந்திய விமானங்களுக்கு கனடா தடை விதித்த நிலையில், தற்போது 6வது முறையாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் தீ விபத்து: பல லட்சம் தேக்கு மரங்கள் எரிந்து நாசம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா மீண்டும் சாம்பியன்!

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவு!

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

சொல்லப் போனால்... இன்னும் கொஞ்சம் இறக்கி வையுங்கள்!

SCROLL FOR NEXT