உலகம்

சீனாவில் ஒரே நாளில் 1,506 பேருக்கு தொற்று

DIN

பெய்ஜிங்: சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்களை அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சீனாவிலிருந்து உலகம் முழுவதும் 225 நாடுகளில் பரவிய கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளில் 49 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் 61 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர்.

சனிக்கிழமை நள்ளிரவு நிலவரப்படி, புதிததாக வடகிழக்கு மாகாணமான ஜிலினில் 956 பேருக்கும், ஷாங்காயில் 438  பேருக்கும் மற்றும் ஜெஜியாங்கில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிற நாடுகளில் சீனா வந்தவர்களில் 51 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

நேற்று சனிக்கிழமை ஒரே நாளில் 2,468 பேர் தொற்று பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தற்போது சிகிச்சை பெறுவோரின்  எண்ணிக்கை 26,167 ஆக உள்ளது, இதில் 57 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தொற்று பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை மற்றும் இறப்பு எண்ணிக்கை 4,638 ஆகவே நீடிக்கிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT