உலகம்

2 மணி நேரத்தில் 70 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தினோம்: இஸ்ரேல் ராணுவம் 

இஸ்ரேல் எல்லையில் 2 மணி நேரத்தில் 70க்கு அதிகமான ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

DIN


இஸ்ரேல் எல்லையில் 2 மணி நேரத்தில் 70க்கு அதிகமான ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

காஜாவின் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் கமாண்டா் தைசீா்-அல்-ஜபரி என்பவரை சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல் ராணுவம்.  இவரை தீவிரவாதி என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அண்மையில், இஸ்லாமிக் ஜிஹாத்தைச் சோ்ந்த மற்றொரு தீவிரவாதி மேற்குக் கரையில் கைது செய்யப்பட்டதாகவும், அதனைத்தொடா்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தலுக்குப் பதிலடி தரும் விதமாக இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது. 

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

காஜாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட 70க்கு அதிகமான ராக்கெட்டுகளை  2 மணி நேரத்தில் சுட்டு வீழ்த்தினோம். அதில் 9 ரக்கெட்டுகளின் துண்டுகள் காஜாவின் எல்லைக்குள்ளேயே விழுந்தது. தீவிரவாதிகளின் ராக்கெட் அப்பாவி இஸ்ரேல் மற்றும் காஜாவின் பொதுமக்களை மிரட்டுவதாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT