கோத்தபய ராஜபட்ச (கோப்புப் படம்) 
உலகம்

கோத்தபய ராஜபட்ச தாய்லாந்தில் தஞ்சம்?

சிங்கப்பூரில் உள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சிங்கப்பூரில் உள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து ஜூலை 14-ஆம் தேதி அவா் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு சென்றாா்.

அங்கிருந்து தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்வதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா்.

இதையடுத்து முன்னாள் அதிபர்  கோத்தபயவுக்கு 14 நாள்கள் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, இரண்டு வாரங்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தபய ராஜபட்சவின் விசா நாளை ஆகஸ்ட் 11 ஆம் தேதியிடன் முடிவடைவதால், அவர் மீண்டும் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் குடும்பத்தினருடன் தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT