உக்ரைன் மீது ஒரேநாளில் 70 ஏவுகணைகள்! தீவிரத் தாக்குதலில் ரஷியா
உக்ரைனில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷியா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷியா ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனும் போராடி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. நேற்று(வெள்ளிக்கிழமை) உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷிய தீவிரத் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று ஒருநாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷியா வீசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து இது மிகவும் மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது.