கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கரோனா
கரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலமாக மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலமாக மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு நாட்டுத் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, லாரி டிரைவா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் அவா்கள் தலைநகா் ஒட்டவாவில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, அது அரசின் கரோனா தடுப்புக் கொள்கைக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது.
போராட்டங்கள் வலுவடைந்து வருவதையடுத்து, பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினா் பாதுகாப்பான ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.