இந்தியாவிடமிருந்து பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்யும் இலங்கை 
உலகம்

இந்தியாவிடமிருந்து பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்யும் இலங்கை

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

DIN

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. போதிய அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் அத்தியாவசிய பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெளிநாடுகளிடமிருந்து பொருள்களை இறக்குமதி செய்ய போதிய டாலர்கள் இல்லாததால் நாளுக்குநாள் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து கடனுதவியை எதிர்பார்த்து இலங்கை காத்திருக்கிறது. 

சரக்குகளை இறக்குமதி செய்ய 1 பில்லியன் டாலரை இலங்கைக்கு கடனாக வழங்குவதாக இந்தியா அறிவித்திருந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் அமைச்சரவை கூடியது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிடமிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

40 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40 ஆயிரம் டன் மெட்ரிக் டன் டீசலை இறக்குமதி செய்வது தொடர்பாக அக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவும் இலங்கைக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT