உலகம்

ஆப்கனில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து: 10 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தின் நஹ்ரின் மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுவதாவது, 

இந்த சம்பவம் செனராக் நிலக்கரி சுரங்கத்தில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழை காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்ததாக செனாரக் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் பஷீர் அகமது கூறினார். 

நஹ்ரின் மாவட்ட ஆளுநர் குவாரி மஜித் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார் மற்றும் சுரங்கத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களைக் கண்டறிவதற்காகப் படைகள் அப்பகுதிக்கு அனுப்பபட்டுள்ளதாக கூறினார். 

சுரங்கத் தொழிலாளர்கள் இறப்பது இது முதல் முறையல்ல. நாட்டில் உள்ள பல்வேறு சுரங்கங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT