பிரிட்டனில் கரோனாவால் 1.5 லட்சம் பேர் பலி
கரோனாவால் பிரிட்டனில் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 1.5 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனாவால் பிரிட்டனில் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 1.5 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலகளவில் கரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. கட்டுப்பாடு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வரும் சூழலில் பிரிட்டனில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சராசரி தொற்று பாதிப்பும் 1.70 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் கடந்த 2020-லிருந்து தற்போது வரை 1.5 லட்சம் பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று(ஜன.10) கரோனா தொற்றின் காரணமாக 76 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 1,50,712 ஆக உயர்ந்தது.
மேலும், இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1.46 கோடியாக பதிவாகியுள்ளது.
தற்போது, பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப்பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.